உகாண்டா பெண்களிடம் 'சேஷ்டை'...ஆம் ஆத்மி 'சோம்நாத் பார்தி' உட்பட 18 பேர் மீது குற்றப்பத்திரிகை!
டெல்லி: உகாண்டா நாட்டு பெண்களிடம் தகாத முறையில் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி உட்பட 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த சோம்நாத் பார்தியின் தொகுதியில், உகண்டா நாட்டு பெண்கள் 7 பேர் பாலியல் தொழில் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, அமைச்சராக இருந்த சோம்நாத் பார்தி ஜனவரி 15-ந்தேதி நள்ளிரவில் அப்பகுதி மக்களுடன் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டார்.

பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட போதைப்பொருள் குறித்த மருத்துவ பரிசோதனையில் அதற்கான அறிகுறி இல்லை என்று மருத்துவமனை கூறியது. இதையடுத்து உகண்டா பெண்கள், தங்களது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக அமைச்சராக இருந்த சோம்நாத் பார்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் மனித உரிமைகள் ஆணையத்துக்கும் சென்றது.
இந்த வழக்கில் நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் சோம்நாத் பார்தி உட்பட 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 100 பக்கம் அளவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 9 ஆப்பிரிக்கா பெண்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications