அப்பாவை விட பெரிய விஷம் இந்த அகிலேஷ்தான்.. மாயா கடும் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அவரது அப்பா முலாயம் சிங் யாதவை விட மகன் அகிலேஷ் யாதவ்தான் மிகப் பெரிய விஷம் என்று முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி சாடியுள்ளார்.

லக்னோவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், முலாயம் சிங்கையும், அகிலேஷ் யாதவையும் கடுமையாக விமர்சித்தார். அப்பாவை விட மகன்தான் பெரிய விஷம் என்றும் அவர் கடுமையாக சாடினார்.

Son has more 'venom' than father: Mayawati on Akhilesh

இதுகுறித்து மாயாவதி கூறுகையில், அப்பாவை விட மகன்தான் அதிக விஷம். அம்பேத்கர் மட்டும் இல்லாமல் போயிருந்தால், இந்த அரசியலமைப்புச் சட்டம் மட்டும் இல்லாமல் போயிருந்தால், இன்னேரத்திற்கு அகிலேஷ் யாதவ் எங்காவது ஆடு மாடுதான் மோய்த்திருப்பார்.

இன்னொருவர் ரத்தக் கறை படிந்த கரங்களுடன் வந்து நான்தான் அடுத்த பிரதமர் என்கிறார். கோத்ரா ரத்தக் கறை படிந்த கரங்களுடன் அவர் வந்து கொண்டிருக்கிறார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால், தலித் மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் கொடுத்து வரும் இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்து விடும்.

முஸ்லீம்கள் முழுமையாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க முன்வர வேண்டும். முஸ்லீம் வாக்குகள் பிரிந்தால், பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியாது. பாஜக ஆட்சிக்கு வந்தால், நாடு தீப்பற்றி எறியும், கலவரம் வெடிக்கும். மத நல்லிணக்கும் சீர்குலையும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+