வெள்ள பாதிப்பு: மக்களுக்கு அடிப்படை உதவிகள் செய்ய மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன- சோனியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று தமிழக வெள்ள சேதம் குறித்து

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கனமழையால் இறந்தவர்களின் குடும்பத்துக்கும் என்னுடைய அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.

Sonia distressed by devastation caused by Tamil Nadu rain

பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்ய தவறி விட்டன. அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி எந்த நேரத்திலும் உதவ தயாராக உள்ளது.

இந்த வெள்ளத்தால் மக்கள் படும் வேதனையை நினைத்து என் மனம் கலங்குகிறது என்று கூறியுள்ளார்.

இந் நிலையில் தமிழக வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன் ராதாகிருஷ்ணன், எம்பி கோபால் சின்னையா ஆகியோர் தலைமையில் குழுவை அமைத்துள்ளார் பாஜக தலைவர் அமித் ஷா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+