'நிறுத்துங்க.. எல்லாத்தையும் நிறுத்துங்க': தமிழக காங். தலைவர்களை நேரில் அழைத்து சோனியா அறிவுரை
டெல்லி: தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், சண்டையை நிறுத்த வேண்டும் என்று அக்கட்சி தலைவர் சோனியாகாந்தி அறிவுறுத்தியுள்ளார். தமிழக காங்கிரஸ் முக்கிய தலைவர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தியபோது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூத்த தலைவர் ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, டெல்லியில் சோனியா தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சிதம்பரம், வசந்தகுமார், திருநாவுக்கரசு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய திருநாவுக்கரசு, "தமிழக காங்கிரசார் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சோனியா கேட்டுக் கொண்டார். தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக வேண்டும், தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராட்டங்களை நடத்தி மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று எங்களுக்கு சோனியா அறிவுரை தெரிவித்தார்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications