லோக்சபா தேர்தல் கூட்டணி: காங். மூத்த தலைவர்களுடன் சோனியா ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் சுஷில் குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திக்விஜய் சிங், அகமது படேல் ஆகியோருடன் கூட்டணி தொடர்பாக சோனியா ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

லோக்சபா தேர்தலில் எந்தெந்த கட்சிகளை, கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம் என இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் கூட்டணி குறித்து முடிவு செய்யும் குழுவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமை வகிக்கிறார்.
தெலுங்கானா மசோதா குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, கூட்டணி குறித்து விரைவில் இறுதி செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications