ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஒரு மணிநேரம் பேசிய சோனியா காந்தி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ராஷ்ட்ரபதி பவனில் சந்தித்து பேசினார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ராஷ்ட்ரபதி பவனில் வைத்து செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து பேசினார்.

ஒரு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பின்போது அவர்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பற்றி பேசியதாக தெரிகிறது.
மூன்றாவது அணிக்கு ஆதரவு இல்லை என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறி வருகிறபோதிலும் கட்சியில் உள்ள சில தலைவர்கள் அவரது கருத்தை ஏற்க மறுக்கிறார்களாம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை என்றால் மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிப்பதில் தவறு இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications