பாட்னாவில் குண்டு வெடித்ததை ‘பட்டாசு’ என நினைத்த தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பாட்னாவில் மோடியின் பேச்சைக் கேட்பதற்காக திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அடுத்தடுத்து வெடித்த குண்டுகளை பட்டாசு வெடித்ததாக நினைத்துள்ளனர்.

நேற்று, பாட்னா காந்தி மைதானத்தில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் பாஜகவின் பிரதம வேட்பாளரும், குஜராத்தின் முதல்வருமான நரேந்திர மோடியின் பேச்சைக் கேட்பதற்காகத் திரண்டிருந்தனர்.

பொதுக்கூட்ட மேடைக்கு மோடி மற்றும் தலைவர்கள் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக அடுத்தடுத்து வெடித்த 2 குண்டுகளின் சத்தத்தை பட்டாசு சத்தம் என நினைத்ததாக சம்பவ இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Sound heard near gandhi maidan .. Cracker or bomb ??

வெடி குண்டுகளின் சத்தம் தீபாவளி பட்டாசு வெடிப்பது போன்று இருந்ததாகவும், இதனால் தலைவர்களை வரவேற்க பட்டாசுகள் வெடிக்கப்படுவதாகவும் அவர்கள் நினைத்துள்ளனர்

அதனால்தான் மைதானத்துக்குள்ளேயும் வெளியேயும் 11.40 மணிக்கு தொடங்கி 12.25 மணி வரை சுமார் முக்கால் மணி நேரம் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தபோதும் தொண்டர்கள் அஞ்சி ஓட எத்தனிக்கவில்லை. ஒருவேளை அவ்வாறு நேர்ந்திருந்தால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகி இருந்திருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+