ரிலீஸாக போறார்னு கொளுத்தி போட்டது யார்.. விடுதலை நாளுக்காக நிஜமாகவே ஆசைப்படும் சசிகலா!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சசிகலா விடுதலைக்கு முற்றுப்புள்ளி வைத்த டிஐஜி ரூபா

    சென்னை: வடிவேலு ஒரு படத்துல சொல்லுவாரே, "நான் பாட்டுக்கு செவனேன்னுதானே கிடந்தேன்.. கவுரவம்.. கவுரவம்னு சொல்லி ஏன் இப்படி பண்ணிட்டீங்க" என்பதை போலவே சசிகலா ரிலீஸ் சம்பவமும் நாலாபக்கமும் பரவி, கடைசியில் அப்படி எதுவுமே இல்லாமல் போய்விட்டது!

    பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, முன்கூட்டியே விடுதலை ஆவார் என தகவல்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியாயின. நன்னடத்தை காரணமாக அவர் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது என்ற கூடுதல் தகவலும் வந்தது. இதனால் அரசியல் வட்டாரம் பரபரத்தது.

    இதற்கு காரணம், தமிழகத்தில் இரட்டை தலைமை என்ற விவகாரத்தை ராஜன் செல்லப்பா கொளுத்தி போட, அதிமுக களமே ஜிகுஜிகுவென தகிக்க ஆரம்பித்தது.

    விடுதலையா?

    விடுதலையா?

    இந்த சமயத்தில்தான் சசிகலா ரிலீஸ் விஷயம் கசிந்தது. இந்த ரிலீசுக்கு பின்னால் அரசியல் இருப்பதாகவே பார்க்கப்பட்டது. அதிமுகவால் கட்சியை ஒருங்கிணைத்து அரவணைத்து நடத்தி செல்ல முடியவில்லை என்றும், ஒற்றை தலைமையை கொண்டுவர சசிகலாவால் மட்டுமே பாஜக நம்புவதாகவும் சொல்லப்பட்டது. அதனால்தான் ரிலீஸ் விஷயத்தில் ஆர்வம் காட்டுவதாகவும், அதுவரை இப்போது உள்ள இரட்டை தலைமையே தொடரட்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூட சொல்லப்பட்டது.

    முற்றுப்புள்ளி

    முற்றுப்புள்ளி

    எனினும், துறை ரீதியாக இது பற்றி சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, "நல்லெண்ண அடிப்படையில் சிறைக்கைதிகளை விடுவிக்க நிறைய விதிகள் இருக்கின்றன. ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரை, முன் கூட்டியே சசிகலா விடுதலை என்பது குறித்த கேள்வியே எழவில்லை" என்று சொல்லி ரிலீஸ் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    நொந்து போயுள்ளார்

    நொந்து போயுள்ளார்

    விதிப்படி இப்படி ஒரு விஷயமே நடக்காது என்றால், விடுதலை என்ற விஷயத்தை கொளுத்தி போட்டது யார் என்றுதான் சசிகலா டென்ஷன் ஆகிவிட்டாராம். ஏற்கனவே தேர்தல் தோல்வியில் நொந்து போய் கிடந்தவர், ரிலீஸ் என்ற விஷயத்தை யாரோ கிளப்பிவிட, இன்னமும் கொதித்து போய்விட்டாராம்.

    விருப்பம்

    விருப்பம்

    இந்த வேலையெல்லாம் செய்தது அனேகமாக திமுகவாகதான் இருக்கும், அதனால் அவர்கள் பரப்பிய வதந்தியை ஏன் ஊர்ஜிதப்படுத்தக்கூடாது என்று யோசிக்கிறாராம். அதாவது, ரிலீஸ் ஆகி வெளியே போனால்தான் என்ன? என்ற கேள்வி சசிகலா மனசில் எழுந்துள்ளதாம்.

    சிறைவிதி

    சிறைவிதி

    ரிலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை சசிகலாவுக்கு இப்போது மிக தீவிரமாக எழுந்துள்ளதால், அதற்கான அடுத்த முயற்சிகளில் இறங்கி உள்ளாராம். சிறைவிதி என்பதையும் தாண்டி, இந்த ரிலீஸ் மேட்டரில் பாஜக உள்ளே நுழையுமா, அல்லது சசிகலா ஆசைப்பட்டதும் நிராசையாகிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+