முடிவில்லாமல் முடிந்தது நாடாளுமன்றம்..முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஆக. 31 முதல் சிறப்புக் கூட்டம்?
டெல்லி : முக்கிய மசோதாக்கள் நிறைவேறாமல் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், சிறப்புக் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு ஏதுவாக தொடர் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டாம் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முக்கிய அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் முடங்கியது.
முதல் நாள் தொடங்கி இன்று (வியாழக்கிழமை) வரை, ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரும், வியாபம் ஊழல் விவகாரத்தில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
காங்கிரஸின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 3 வாரங்களும் எந்த அலுவல்களும் இன்றி வீணாகிப் போனது.
மேலும் தொடர் அமளி காரணமாக சரக்கு மற்றும் சேவை வரி, நிலம் கையப்படுத்தும் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை.
இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால் கூட்டத்தொடர் முடிந்ததற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே, குறுகிய கால அவகாசத்தில் மீண்டும் நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 85 (2) ன்படி குடியரசுத் தலைவர் இரு அவைகளிலும் கூட்டத்தொடர் முடிந்ததற்கான அறிவிப்பை வெளியிடுவார். ஆனால், இரு அவைகளும் முடிந்ததற்கான அறிவிப்பை வெளியிடாவிட்டோலோ, பேரவைத் தலைவரால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டாலோ, அதே கூட்டத்தொடர் எந்த நேரத்திலும் மீண்டும் கூட்டப்படலாம்.
ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதற்காக, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட அவைகளை மீண்டும் கூட்ட அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
எனவே, மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற வாய்ப்பிருக்குமானால், மீண்டும் கூட்டத்தைக் கூட்டலாம் என முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் 31-ந்தேதி முதல் செப்டம்பர் 4-ந்தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications