ஒரு ரூபாய் சம்பாதித்தால் 94 பைசா செலவாகி விடுகிறது, 6 பைசாதான் மிச்சம்: ரயில்வே அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரயில்வே சம்பாதிக்கும் வருவாயில் ஒரு ரூபாயில் 94 பைசா செலவிடப்பட்டு விடுகிறது. 6 பைசாதான் மிச்சமாகிறது என்று கூறியுள்ளார் ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா கூறியுள்ளார்.
மத்திய ரயில்வே பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய கெளடா கூறுகையில், பயணிகள் கட்டண உயர்வின் மூலம் கூடுதலாக ரூ. 8000 கோடி வருவாய் கிடைக்கும். ஆனால் இந்தக் கட்டண உயர்வு மட்டும் போதாது.

ரயில்வே வருவாயில் ஈட்டப்படும் ஒவ்வொரு ரூபாயிலும் 94 பேசை செலவாகி விடுகிறது. 6 பைசாதான் மிச்சமாகிறது.
இந்தியாவில் தினசரி 2.3 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். இது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகைக்கு சமம். இவர்களுக்காக 12,500 ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றார் கெளடா.












Click it and Unblock the Notifications