பற்றி எரியும் லடாக்.. பாஜக அலுவலகத்துக்கு தீவைப்பு.. மாநில அந்தஸ்து கோரிய போராட்டத்தில் வன்முறை
லடாக்: லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அதேபோல் அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்கு உண்ணாவிரதம் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு நடுவே இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு வன்முறையானது. லே பகுதியில் உள்ள பாஜகவின் அலுவலகம், போலீஸ் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர்.
மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் கடந்த 2019ம் ஆண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதோடு, ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசமும், லடாக் என்ற யூனியன் பிரதேசமும் புதிதாக உருவாக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. லடாக் பகுதி துணை நிலை ஆளுநர் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை போல், லடாக்கில் வசிக்கும் மக்களும் தனி மாநில அந்தஸ்து கோரி வருகின்றனர். இந்த மாதம் தொடக்கத்தில் லடாக்கில் இந்த போராட்டம் தீவிரமடைய தொடங்கியது.
கடந்த 10ம் தேதி முதல் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்பட பலரும் உண்ணாவிரதத்ததை தொடங்கினர். லடாக்கை தனி மாநிலமாக மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களை போல் லடாக்கை அரசியலமைப்பு அட்டவணை 6ல் சேர்த்து சுயாட்சி மாநிலமாக்க வேண்டும் என்று கூறினர். இந்த உண்ணாவிரதம் காரணமாக நேற்று முன்தினம் சிலர் மயங்கினர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை.
மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் (அக்டோபர் ) 6ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்தவர்கள் தனிமாநில கோரிக்கை மற்றும் அரசியலமைப்பு அட்டவணை 6ல் லடாக்கை சேர்ப்பது உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து இன்று காலையில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அந்த சமயத்தில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர். அதுமட்டுமின்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பாஜக அலுவலகத்தின் மீது கல்வீசி சூறையாடினர். அலுவலகத்துக்கு தீவைத்து எரித்தனர்.
BJP office in Leh, Ladakh set on fire during massive protests by people demanding statehood and inclusion of Ladakh under the 6th Schedule.#LadakhProtests pic.twitter.com/rdkD8lOXzp
— Diksha Kandpal🇮🇳 (@DikshaKandpal8) September 24, 2025
இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லடாக், லே நகரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளனர். நிலைமை எல்லை மீறி போனதால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications