கேரளாவில் தெரு நாய்கள் அடித்துக் கொலை: மேனகா காந்தி கண்டனம்
கேரளாவில் தெரு நாய்களை அடித்துக் கொன்றவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.
டெல்லி: கேரளாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அடித்துக் கொல்லப்பட்டதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் துறை அமைச்சர் மேனகா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள வர்கலா பகுதியில் தெருநாய்கள் கடித்ததில் 90 வயது முதியவர் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவர் தெருநாய்களால் தாக்கப்பட்டு இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி இளைஞர்கள் சிலர் அங்கு சுற்றித்திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட தெருநாய்களை வியாழக்கிழமை அதிகாலையில் அடித்துக் கொன்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வர்கலா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேரள மாநில காவல்துறை இயக்குநரையும் தொடர்புகொண்டு அவர் பேசியுள்ளார்.
மேனகா காந்தியின் இந்தக் கருத்துக்கு கேரளாவில் பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம் மாநிலச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், விலங்குகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் போல மேனகா காந்தி நடிக்கிறார். நாய்களால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் நாய்களுக்கு சாதகமாக கருத்து தெரிவிப்பது கேரள மாநிலத்தவரை அவமதிப்பது போல் உள்ளது என கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications