உத்தரகாண்ட், டெல்லி, உ.பி.யில் சக்தி வாய்ந்த நில அதிர்வு!
டெல்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
டேராடூன்: உத்தரகாண்ட், டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.5 அலகுகளாகப் பதிவாகி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலியை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டிருந்தது. அம்மாநிலத்தின் ஹரித்துவார், ருத்பிரயாக் உள்ளிட்ட பல இடங்களிலும் கடுமையாக நில அதிர்வு உணரப்பட்டது.

இதன் எதிரொலியாக டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்நில அதிர்வானது ரிக்டரில் 5.5 அலகுகளாகப் பதிவாகி உள்ளது.
#UttarPradesh: People in #Moradabad evacuated their buildings after earthquake tremors in the region pic.twitter.com/voYCLtZch8
— ANI UP (@ANINewsUP) December 6, 2017
நில அதிர்வுகளுக்கு பிந்தைய அதிர்வுகள் தொடரக் கூடும் என்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications