'வியாபம்'... மாணவர்களை அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்க திக்விஜய்சிங் கோரிக்கை
டெல்லி: மத்திய பிரதேச பாரதிய ஜனதா அரசு மீதான வியாபம் ஊழல் முறைகேட்டை சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ள நிலையில், சிறையில் உள்ள மாணவர்களை அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் அரசு தேர்வு வாரியமான 'வியாபம்' மூலம் முறைகேடான வகையில் ஆயிரக்கணக்கானோர் பணி நியமனம் பெற்ற ஊழல் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த ஊழல் வழக்கில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வியாபம் முறைகேட்டில் சிக்கிய 47 பேர் மர்மமான முறையில் மரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் தற்போது சி.பி.ஐ. வசம் கைமாறியது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறுகையில், வியாபம் ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது. இதற்கு அப்பால் இந்த வழக்கில் சிறையில் உள்ள மாணவர்களை அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்க வேண்டும்.
அப்போதுதான் ஊழல் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பும் அம்பலமாகும். ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட மிக பயங்கரமான ஊழலாக இது இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட ஆளுநர்களையெல்லாம் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் எஃப்.ஐ.ஆர். இல்லாத ஆளுநர்களையெல்லாம் தக்க வைத்துக் கொள்கிறது.
இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.
மத்திய பிரதேச பாரதிய ஜனதா அரசு மீதான வியாபம் ஊழல் முறைகேட்டை சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ள நிலையில், சிறையில் உள்ள மாணவர்களை அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் வலியுறுத்தியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications