கேரளாவின் பிடிவாதம்.. முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க துணைக் குழு உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையில் 3 அடி நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு முல்லைப் பெரியாறு துணைக்கண்காணிப்புக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் 3 அடி நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு முல்லைப் பெரியாறு துணைக்கண்காணிப்புக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அம்மாநில அணைகள் வேகமாக நிரம்பின.
இதைத்தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்குமாறு தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். ஆனால் அணை பாதுகாப்பாக உள்ளது நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவித்தார்.

மீண்டும் விசாரணை
இதையடுத்து நீர்மட்டத்தை குறைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்தது. இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழகமும் காரணம்
அப்போது கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. முல்லை பெரியாறு அணையை திடீரென திறந்து விட்டது பாதிப்பிற்கு காரணம் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட நீரும் கேரளாவின் இடுக்கி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான காரணங்களில் ஒன்று என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் கேரள அரசு குற்றம்சாட்டியுள்ளது.

நீர்மட்டத்தை குறைக்க உத்தரவு
இதைத்தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 3 அடி குறைக்க முல்லைப்பெரியாறு துணை கண்காணிப்புக்குழு உத்தரவிட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்கப்படும்.












Click it and Unblock the Notifications