சுனந்தாவின் உடற்கூறுகளை இங்கிலாந்துக்கு பதில் எப்.பி.ஐக்கு அனுப்பியது மகிழ்ச்சி: சு. சாமி
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவின் உடற்கூறுகள் இங்கிலாந்துக்கு அல்லாமல் எப்.பி.ஐ.க்கு அனுப்பி வைத்ததில் மகிழ்ச்சி என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக அறிவித்த டெல்லி போலீசார் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். சுனந்தா கொலை செய்யப்பட்டதாக அவர் இறந்து ஓராண்டு கழித்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி சுனந்தா இறந்த 5வது வாரத்திலேயே அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
Glad that Sunanda killer Poison determination has been sent to FBI instead of to UK
— Subramanian Swamy (@Swamy39) January 16, 2015 சுனந்தாவை யார் கொன்றது என்று தரூருக்கு தெரியும் என்று சாமி தெரிவித்துள்ளார். சுனந்தாவின் உடலில் பொலோனியம் 210, பாம்பு விஷம் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இறக்க காரணமாக இருந்த விஷத்தை கண்டுபிடிக்க அவரின் உடற்கூறுகளை போலீசார் அமெரிக்காவில் உள்ள எப்.பி.ஐ.க்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சுனந்தாவின் உடற்கூறுகளை இங்கிலாந்துக்கு இல்லாமல் எப்.பி.ஐ.க்கு அனுப்பியுள்ளதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications