ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம்- சு.சுவாமி பகீர் தகவல்
துபாயில் நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
Recommended Video

டெல்லி: துபாயில் நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி, ஏஎன்ஐ ஊடகங்களுக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்த பேட்டி:

கொலை செய்யப்பட்டாரா?
துபாயில் ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம். உடல்நலனில் அக்கறை கொள்ளக் கூடிய ஸ்ரீதேவிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததே இல்லை.

குளியல் தொட்டியும் மரணமும்
ஒருவேளை ஸ்ரீதேவிக்கு யாரேனும் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றினார்களா? அதேபோல் குளியல் தொட்டியில் விழுந்து ஒருவர் மரணமடைய வாய்ப்பு இல்லை.

அழுத்தி கொலையா?
குளியல் தொட்டியில் யாரேனும் தள்ளி மூச்சுவிட முடியாதபடி அழுத்தினால்தான் மரணம் ஏற்படும். ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் அறையின் சிசிடிவி கேமராக்களில் என்ன பதிவாகி உள்ளது?
|
சினிமா நடிகைகளுக்கும் தாவூத்துக்குமான லிங்க்
ஸ்ரீதேவி மாரடைப்பால்தான் இறந்தார் என திடீரென மருத்துவர்கள் கூறியது ஏன்? சினிமா நடிகைகளுக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications