'கிரண்பேடி முதல்வர்' என ட்வீட் போட்ட சு.சாமி இப்போது சுய பரிசோதனை செய்ய சொல்கிறார்!
டெல்லி: நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்து விட்டதாக தனது கட்சியினருக்கு சூசகமாக டுவிட்டரில் அறிவுரை தந்துள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி. ஆனால் இதே சுவாமிதான், கிரண் பேடி முதல்வர் என்று அவசரப்பட்டு டுவிட் போட்டு குழப்பியவர்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது பாஜக. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் பாஜக தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டது.
தொடர்ந்து மோடி அலை வீசுவதாக நம்புகிறது பாஜக. அதன்படி, தங்களது டெல்லி முதல்வர் வேட்பாளராக கிரண்பேடியை களமிறக்கியது. ஆனால், டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பாஜக எதிர்பார்ப்பிற்கு எதிராக அமைந்து விட்டது.
இந்நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்து விட்டது' எனத் தெரிவித்துள்ளார்.
இது மற்ற பாஜக தலைவர்களுக்கு அவர் சூசகமாக கூறும் அறிவுரை எனக் கூறப்படுகிறது. இனியும் தொடர்ந்து மோடி அலையில் சிக்கிக் கொண்டிருக்காமல், கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது என அவர் கூறுவது போல் உள்ளது.
Time for introspection, reality check and course correction for the sake of the nation. Tripod mention in tweets has to be re balanced.
— Subramanian Swamy (@Swamy39) February 10, 2015 அதேசமயம், காங்கிரஸையும் அவர் வாரியுள்ளார். இதுகுறித்து விடுத்துள்ள இன்னொரு டிவிட்டில் காங்கிரஸ் கட்சி காணாமல் போனது தனது வாக்குகள் குறித்துக் கவலைப்பாமல், அது பற்றி ஆய்வு செய்யாமல் பாஜகவின் தோல்வியைக் கொண்டாடி வருவது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் சுவாமி.
ஆனால், இதே சுவாமி தான் சில தினங்களுக்கு முன்னர் கிரண்பேடி தான் டெல்லி முதல்வராக வருவார் என தனது டுவிட்டர் பக்கத்தில் ஆருடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்தர் பல்டி அடித்து அப்படியே மாற்றிப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Announcing next CM of Delhi is Kiran Bedi
— Subramanian Swamy (@Swamy39) February 7, 2015 -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications