இட்லி நீ வாடா வாடா.. வடை.. நீ போடா போடா.. விலை ஏறிப் போச்சே.. விசனத்தில் பெங்களூர்வாசிகள்!
பெங்களூரு: இட்லி, தோசை, பொங்கல் என காலை டிபனுக்கு வடைதான் மேட்ச். ஆனால் உளுந்தப்பருப்பு விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் இட்லி, வடைகளில் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சில ஹோட்டல்களில் வடை சுடுவதையே நிறுத்திவிட்டனராம். ஒரு வடையின் விலை 20 ரூபாயில் இருந்து 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் வடை பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். வடையின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் காலை டிபனுடன் வடை சாப்பிடுவதையே பலரும் தவிர்த்து வருகின்றனர்.
இந்த ஆண்டு கர்நாடகாவில் பருவ மழை ஏமாற்றிவிட்டது. சரியான அளவு மழையில்லாத காரணத்தால் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தானியங்களின் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பருப்பு வகைகளின் வரத்து இல்லாத காரணத்தால் கர்நாடகாவில் பருப்புகளுக்கு விலை அதிகரித்துள்ளது.

பருப்பு விலை உயர்வு
கடந்த 3 மாதங்களில் பருப்புகளின் விலை தொடர்ந்து பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் தோசை, இட்லி, வடை ஆகியவற்றின் விலையை கர்நாடகா ஓட்டல்காரர்கள் கணிசமான அளவுக்கு உயர்த்தி விட்டனர். பல இடங்களில் விலை உயர்வுக்குப் பதில் வடையின் அளவை சுருக்கிவிட்டனர்.

இட்லி, வடை
2 இட்லி 20 ரூபாய்க்கு விற்கப்பட்டன ஆனால் இப்போது ரூ.10 அதிகரித்து 30 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூர், மைசூர் உள்ளிட்ட நகரங்களில் முன்பு வடை விலை ரூ.15 முதல் ரூ.20 வரை இருந்தது. தற்போது அவற்றின் விலை ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்து விட்டது.

வடைக்கு டாடா
பெங்களூரில் 3 மாதங்களுக்கு முன்பு வரை ஒரு தோசை ரூ.40-க்கு விற்கப்பட்டது. தற்போது தோசை விலை ரூ.50 ஆக உயர்ந்து விட்டது. உளுந்தப்பருப்பின் விலை உயர்வு காரணமாக ரோட்டோர கையேந்தி ஓட்டல்களில் வடை சுடுவதையே நிறுத்தி விட்டனர்.

விலை உயர்வு அவசியம்
பெரிய ஓட்டல்கள் விலையை உயர்த்தியதால் சிறிய ஓட்டல்காரர்களும் இட்லி, தோசை விலையை உயர்த்தி விட்டனர். இதனால் கர்நாடகா மாநிலம் முழுவதும் உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. பருப்பு விலை உயர்வினால் இட்லி, தோசை விலையை இப்படி உயர்த்துவதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று ஓட்டல் அதிபர்கள் அறிவித்துள்ளனர்.
வடை பிரியர்களின் பாடுதான் பெரும்பாடாக உள்ளது!
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications