எடியூரப்பா ராஜினாமா? நாங்கதான் மெஜாரிட்டின்னு 100% நம்பிக்கையா சொன்னாரே.. ஏன் இந்த திடீர் முடிவு?
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

பெங்களூரு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடியூரப்பா அரசு மீது இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு விதான் சவுதா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளை சேர்ந்த 193 எம்எல்ஏக்கள் பதவியேற்றுள்ளன. இன்னும் சற்றுநேரத்தில் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால் என்ன நடக்கும் என ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ராஜினாமா செய்ய முடிவு
இந்நிலையில் 104 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் இதுவரை எடியூரப்பா தரப்புக்கு போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்கூட்டியே ராஜினாமா?
இதற்காக பெங்களூரில் உள்ள டெல்லி பாஜக தலைவர்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தி வருகிறார். வாக்கெடுப்பில் தோல்வியடையலாம் என்ற அச்சத்தில் முன்கூட்டியே அவர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.

100% மெஜாரிட்டி
வாக்கெடுப்பில் வெற்றி கிடைக்குமா என பாஜக தலைவர்கள் பலத்த சந்தேகத்தில் உள்ளனர். காலை வரை 100% எங்களுக்கு தான் மெஜாரிட்டி உள்ளது, நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என கூறினார் எடியூரப்பா.

பிறகு கொண்டாடுவோம்
மேலும் 5 மணி வரை அமைதியாக இருங்கள் அதற்கு பிறகு கொண்டாடுவோம் என்றும் கூறினார். பாஜக மூத்த தலைவரான சதானந்தா கவுடாவும் எடியூரப்பாதான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதல்வர் என கூறினார்.

பேரம் பேசும் ஆடியோ
இந்நிலையில் எடியூரப்பா ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பேரம் பேசிய ஆடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பாஜக தலைவர்களின் பிபியை எகிற வைத்துள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பீதியில் காங்கிரஸ், மஜத
ராஜினாமா முடிவையடுத்து, 13 பக்க உரையை தயாரித்துள்ளார் எடியூரப்பா. அதில் மக்களுக்காக தான் செய்த நல்ல திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறி உருக்கமாக பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் லிங்காயத் எம்எல்ஏக்கள் என்ன செய்யப் போகிறார்களோ என காங்கிரஸ் மஜத கட்சிகள் பீதியடைந்துள்ளன.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications