For Quick Alerts
For Daily Alerts
Just In
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம்.. சுகேஷ் சந்திரசேகருக்கு காவல் நீட்டிப்பு
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற்று தர தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரன் தரப்புக்கு பெற்றுத்தர சுகேஷ் சந்திரா முயற்சி செய்ததாக, அவரை டெல்லி காவல்துறை கைது செய்தது. நீதிமன்ற காவலில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவரது நீதிமன்ற காவலை நவம்பர் 9 வரை நீட்டித்து டெல்லி திஸ்ஹசாரி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறை கால அவகாசம் கேட்டதால் சுகேஷுக்கு நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Sukesh Chandrashekhar's judicial custody extended up to November 9, Delhi court ordered.
Story first published: Thursday, November 2, 2017, 13:44 [IST]