Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இமாச்சல பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு.. நாளை பதவியேற்பு.. தீர்ந்தது குழப்பம்

Subscribe to Oneindia Tamil

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வென்ற பிறகும் கூட யார் முதல்வர் என்பதில் குழப்பம் தொடர்ந்து வந்த நிலையில், 58 வயதான சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக தேர்வாகியுள்ளார்.

கடந்த நவ.12ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்தந நிலையில், நேற்று முன்தினம் அங்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அங்கு பாஜக, காங்கிரஸ் உடன் ஆம் ஆத்மியும் இந்த முறை களமிறங்கியது.

அங்கு பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகிறது. இந்தத் தேர்தலிலும் கூட அதுவே தொடர்ந்துள்ளது.

 இமாச்சல் தேர்தல்

இமாச்சல் தேர்தல்

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வென்று தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை பிடித்துள்ளது. அங்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 43.9% சதவீகித வாக்குகள் கிடைத்துள்ளன. பாஜகவால் வெறும் 25 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்துள்ளது. ஆட்சி மாற்றத்தை நிறுத்தி, ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்த போதிலும் அது தோல்வியிலேயே முடிந்துள்ளது.

 ரொம்ப முக்கியம்

ரொம்ப முக்கியம்

இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு ரொம்பவே முக்கியமானதாகும். ஏனென்றால் கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி ஒரு தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்பது இதுவே முதல்முறையாகும். கடந்த 2018இல் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் (இப்போது மபி-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது) வென்று ஆட்சியை பிடித்து இருந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளாக நடந்த அத்தனை தேர்தல்கலிலும் காங்கிரஸ் வரிசையாக தோல்வியையே தழுவியிருந்தது. இந்தச் சூழலில் காங்கிரஸின் இந்த வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்த குழப்பம்

தொடர்ந்த குழப்பம்

இருந்த போதிலும், இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சியால் முழுவதுமாக கொண்டாட முடியவில்லை. ஏனென்றால் அங்கு அடுத்த முதல்வர் யார் என்பதில் குழப்பம் தொடர்கிறது. நேற்றைய தினம் நடந்த எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் டெல்லி தலைமை முதல்வர் யார் என்பதை முடிவு செய்வார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருந்த போதிலும், இன்று மாலை வரையிலும் யார் முதல்வர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மறைந்த இமாச்சல் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங் முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்பட்டது.

 புதிய முதல்வர்

புதிய முதல்வர்

பிரதீபா சிங்கை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று பெரிய பேரணியை எல்லாம் காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர். இதற்கிடையே தற்போது எம்பியாக உள்ள அவர், முதல்வர் ரேஸில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு அடுத்து சுக்விந்தர் சிங் சுகு மற்றும் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் கடும் போட்டி நிலவிய நிலையில், இதில் சுக்விந்தர் சிங் சுகு இமாச்சல பிரதேச முதல்வராக அறிவிக்கப்பட்டார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரவு 7 மணியளவில் வெளியானது. 4 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவசாலியான இவர் நாளை காலை புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.

 யார் இந்த சுக்விந்தர் சிங் சுகு

யார் இந்த சுக்விந்தர் சிங் சுகு

அவர் நாளை பதவியேற்கலாம் என்றும் கூறப்படுகிறது. 58 வயதான சுக்விந்தர் சிங் சுகு கடந்த காலங்களில் மாநிலத்தில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். அவர் இப்போது காங்கிரஸ் பிரச்சாரக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.. இப்போது அவர் ஐந்தாவது முறையாக இமாச்சலில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் அவர், பாஜகவின் விஜய் அக்னிஹோத்ரியை சுகு 3363 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திருந்தார். இருப்பினும், இவரை முதல்வராக அறிவித்தால் பிரதீபா சிங் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+