சுனந்தா புஷ்கர் கொலை- சசிதரூரிடம் நாளை டெல்லி போலீஸ் மீண்டும் விசாரணை!
டெல்லி: சுனந்தா புஷ்கர் கொலை தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் நாளை மீண்டும் விசாரணைக்கு வருமாறு டெல்லி காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது மரணம் தற்கொலை என்று முதலில் கூறப்பட்டாலும் பின்னர் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.

இந்த கொலை வழக்கை விசாரிக்க டெல்லி காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது. இக்குழு சசி தரூரின் உதவியாளர் ஆர்.கே.சர்மா, டெல்லி பத்திரிகையாளர் நளினிசிங் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணைகளின் போது ஐ.பி.எல். போட்டி முறைகேடுகளை அறிந்த சுனந்த அதை அம்பலப்படுத்த திட்டமிட்டிருந்ததாக தெரியவந்தது.
இதனால் இந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசி தரூருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது. சசி தரூரும் சம்மனை பெற்றுக்கொண்டு புலனாய்வு குழு முன் ஆஜராகி 50-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதே போல் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அமர்சிங்கிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. அவர் விசாரணையின் போது, சுனந்தா இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு, தன்னிடம் ஐ.பி.எல். போட்டி சர்ச்சை குறித்து பேசியதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து துபாயில் இருந்த சுனந்தாவின் மகன் ஷிவ் மேனனும் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் சசி தரூருக்கும் சுனந்தாவுக்கும் சுமூகமான உறவு இருந்ததா? என்று விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் சசி தரூரை நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு இன்று சம்மன் அனுப்பியுள்ளது. இது குறித்து டெல்லி காவல்துறை ஆணையாளர் பாசி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சசி தரூர் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளோம். அவரிடம் இருந்து சில சந்தேகங்களுக்கான பதில்களைப் பெற வேண்டியுள்ளது.
சுனந்தாவின் மகன் ஷிவ் மேனனிடம் வாக்குமூலம் பெற்றுள்ளோம் என்று ஏற்கெனவே கூறியுள்ளோம். இதனடிப்படையில் சசி தரூர் மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்டோரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு சசி தரூர் ஆஜராகிவிட்டால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்வோம்.
இவ்வாறு பாசி கூறினார்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications