மெஹரை தெரியும் என்று தரூர் வாக்குமூலம், விரைந்து விசாரிக்க ஷிண்டேவுக்கு கடிதம்

Subscribe to Oneindia Tamil

Sunanda's death: Tharoor records statement, writes to Shinde for speedy probe
டெல்லி: பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹர் தராரை தெரியும் என்றும், தங்களுக்குள் நல்ல உறவு இருந்தது என்றும் மத்திய அமைச்சர் சசி தரூர் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹர் தராருக்கும், தனது கணவரும், மத்திய அமைச்சருமான சசி தரூருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாக சுனந்தா புஷ்கர் குற்றம் சாட்டினார். இதையடுத்து அவர் கடந்த 17ம் தேதி இரவு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டல் அறையில் பிணமாகக் கிடந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சசி தரூர் நேற்று மாலை வசந்த் விஹார் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஆலோக் சர்மா முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

அப்போது அவர் தராரை தனக்கு தெரியும் என்றும், தங்களுக்குள் நல்ல உறவு இருந்தது என்றும் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் அது எந்த மாதிரியான உறவு என்பதை அவர் விவரிக்கவில்லையாம்.

சுனந்தா இறக்கும் முன்பு கடைசியாக தனது தோழியும், பத்திரிக்கையாளருமான நளினி சிங்கிடம் தான் போனில் பேசினார். அதனால் நளினியும் மாஜிஸ்திரேட் சர்மாவிடம் வாக்குமூலம் அளித்தார்.

இதற்கிடையே சுனந்தா விவகாரம் குறித்து விரைந்து விசாரணை நடத்துமாறு தரூர் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+