சுனந்தாவின் தோழி பத்திரிக்கையாளர் நளினி சிங்கை இன்று விசாரிக்கும் போலீஸ்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா கொலை வழக்கில் மூத்த பத்திரிக்கையாளர் நளினி சிங்கிடம் டெல்லி போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் சில பத்திரிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி போலீசார் அறிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சுனந்தாவுக்கு நெருக்கமான மூத்த பத்திரிக்கையாளரான நளினி சிங்கிடம் போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.
ஐபிஎல் தொடர்பு:
சுனந்தா ஐபிஎல் பற்றி தன்னிடம் பேசியதாக அண்மையில் நளினி சிங் தெரிவித்திருந்தார். ஜனவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சுனந்தா நளினியிடம் ஐபிஎல் விவகாரம் பற்றி பேசியுள்ளார். சுனந்தா தன்னிடம் என்ன தெரிவித்தார் என்பதை நியாபகப்படுத்த முடியவில்லை என்று நளினி தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல்லில் நடக்கும் விஷயங்களை பார்த்தாயா என்று சுனந்தா தன்னிடம் கூறியதாக நளினி தெரிவித்துள்ளார்.
சுனந்தா இறந்த பிறகு நளினி சிங் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். சுனந்தா விவகாரம் குறித்து போலீசார் மேலும் விசாரிக்க வேண்டும் என்று நளினி சிங் தெரிவித்திருந்தார்.
சசி தரூர் பாகிஸ்தான் பத்திரிக்கையாளரான மெஹர் தராருடன் துபாயில் 3 நாட்கள் இருந்ததாக சுனந்தா நளினியிடம் தெரிவித்துள்ளார்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications