காவிரி விவகாரம்: போராட்டத்தை கைவிட்டு தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும்.. சுப்ரீம்கோர்ட் வேண்டுகோள்
காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video

டெல்லி: காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு வரும் 9ஆம் தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தமிழக மக்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். வேறொரு வழக்கில் ஆஜரான தமிழக தலைமை வழக்கறிஞர் உமாபதியிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏப்ரல் 9 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தமிழகத்தில் போராட்டம் ஏன் என நீதிபதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டங்களை கைவிட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்.












Click it and Unblock the Notifications