தங்கப் புதையலைத் தோண்ட தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே தங்கப் புதையலைத் தோண்டும் பணிக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் மன்னர் ராவ்ராம் பக்ஸ் சிங்கின் சிதிலமடைந்த கோட்டையில் ஆயிரம் டன் தங்கம் இருக்கிறது என்று மன்னர் தமது கனவில் கூறியதாக சாது சோபன் சர்கார் என்பவர் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கடந்த 4 நாட்களாக தங்கத்தை எடுப்பதற்கான அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த அகழ்வாய்வை நிறுத்தக் கோரியும் கண்காணிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.
இம் மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தங்கத்தை தோண்டி எடுக்கும் அகழ்வாய்வுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications