Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐபிஎல் கேஸ்: பிசிசிஐ தலைவர் பதவிக்கு ஜனவரி 31 வரை தேர்தல் நடத்தக் கூடாது - சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் வழக்கு முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தக் கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் 2015ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை தேர்தலை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் குறித்த முத்கல் கமிட்டி அறிக்கை மீதான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தாகூர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Supreme Court Directs BCCI to Postpone Elections Till End of January

விசாரணையின் போது நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசன் இரண்டு பொறுப்பில் இருப்பதினால் நிலவும் முரண்பாடு உள்பட பல பிரச்சினைகள் இருக்கிறது. எனவே இந்த வழக்கு விசாரணை முடிய இன்னும் சில காலம் பிடிக்கும் என்றனர்.

இதையடுத்து என்.சீனிவாசன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தல் நடத்த நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் டிசம்பர் 17-ம் தேதிக்குள் விசாரணை முடியாவிட்டால், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் சுந்தரம் வாதிடுகையில் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தல் நடத்துவதற்கு 3 வாரங்களுக்கு முன்பே உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டியது அவசியம். எனவே ஜனவரி 31-ம் தேதி வரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

முன்னதாக கபில் சிபல் வாதிடுகையில், ஐ.பி.எல். வழக்கு முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்திலோ, ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டத்திலோ கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்க என்.சீனிவாசன் தயார். அதற்கான உத்தரவாதத்தை எழுத்துபூர்வமாகவும் தாக்கல் செய்யவும் தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டார். இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலை ஜனவரி 31-ம் தேதி வரை தள்ளி வைக்க நீதிபதிகள் ஒத்துக்கொண்டனர்.

வாரிய தலைவர் தேர்தல் தேதி 3-வது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கு வருகிற 15 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+