ஐபிஎல் கேஸ்: பிசிசிஐ தலைவர் பதவிக்கு ஜனவரி 31 வரை தேர்தல் நடத்தக் கூடாது - சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் வழக்கு முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தக் கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் 2015ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை தேர்தலை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் குறித்த முத்கல் கமிட்டி அறிக்கை மீதான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தாகூர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசன் இரண்டு பொறுப்பில் இருப்பதினால் நிலவும் முரண்பாடு உள்பட பல பிரச்சினைகள் இருக்கிறது. எனவே இந்த வழக்கு விசாரணை முடிய இன்னும் சில காலம் பிடிக்கும் என்றனர்.
இதையடுத்து என்.சீனிவாசன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தல் நடத்த நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் டிசம்பர் 17-ம் தேதிக்குள் விசாரணை முடியாவிட்டால், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் சுந்தரம் வாதிடுகையில் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தல் நடத்துவதற்கு 3 வாரங்களுக்கு முன்பே உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டியது அவசியம். எனவே ஜனவரி 31-ம் தேதி வரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.
முன்னதாக கபில் சிபல் வாதிடுகையில், ஐ.பி.எல். வழக்கு முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்திலோ, ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டத்திலோ கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்க என்.சீனிவாசன் தயார். அதற்கான உத்தரவாதத்தை எழுத்துபூர்வமாகவும் தாக்கல் செய்யவும் தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டார். இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலை ஜனவரி 31-ம் தேதி வரை தள்ளி வைக்க நீதிபதிகள் ஒத்துக்கொண்டனர்.
வாரிய தலைவர் தேர்தல் தேதி 3-வது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கு வருகிற 15 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
சிவகார்த்திகேயனுக்கு சனி பிடித்துவிட்டது.. நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேச்சு.. மீண்டும் சிக்கிய தவெக -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications