கடைசி கதவும் மூடப்பட்டது... பாலியல் பலாத்கார வழக்கில் நித்தியானந்தாவுக்கு சிக்கல்
Recommended Video

டெல்லி: பலாத்கார வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய நித்தியானந்தா மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதோடு, விரைவாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
நித்தியானந்தாவுக்கு எதிராக, ஆர்த்திராவ், லெனின், வினய் பரத்வாஜ், மூவரும் பலாத்கார வழக்கு தொடர்ந்தனர். 2010ல் சென்னை போலீசிடம் அவர்கள் பாலியல் புகார் கொடுத்தனர். அந்த புகார் கர்நாடக மாநில காவல்துறைக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து விசாரித்த கர்நாடக சிபிசிஐடி போலீசார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நித்தியானந்தா உட்பட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து தள்ளுபடி
இதன்பிறகு வழக்கில் இருந்து விடுதலையாக நித்தியானந்தா தரப்பு அடுத்தடுத்து வழக்குகளை தாக்கல் செய்து வந்தது. ஆனால், ஒவ்வொரு நீதிமன்றத்திலும் வரிசையாக நித்தியானந்தா மனுக்கள் தள்ளுபடிதான் செய்யப்பட்டு வருகின்றன.

கைவிட்டது ஹைகோர்ட்
பாலியல் வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்ய நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை கடந்த பிப்ரவரி மாதம் ராம்நகர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கர்நாடக ஹைகோர்ட்டில் நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீடு மனு, மே மாதத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம் விசாரணை
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் நித்தியானந்தா. நீதிபதிகள் நாகேஸ்வரராவ், சந்தனகவுடர் அமர்வு இன்று இதை விசாரித்தது.
நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கறிஞர் அஷ்வின் வைஷ் ஆஜராகி வாதம் முன் வைத்தார்.

விரைந்து விசாரிக்க உத்தரவு
இதையடுத்து நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், வழக்கை விரைவாக விசாரிக்க ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் நித்தியானந்தாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications