டெல்லி மாணவி பலாத்கார வழக்கு: இருவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட் தடை!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இருவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த வாரம் 4 பேருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து தூக்கு விதிக்கப்பட்ட 4 பேரில் பவன் மற்றும் முகேஷ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மார்ச் 31-ந் தேதி வரை இருவரது தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது.












Click it and Unblock the Notifications