இப்பத்தான் முதல் முறையா பிரதமர் போல செயல்பட்டிருக்கீங்க.. மோடிக்கு ராகுல் பாராட்டு + நக்கல்!
புலந்த்சாஹர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து ராணுவம் நடத்திய தாக்குதலுக்காக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். கூடவே, இப்போதுதான் முதல் முறையாக பிரதமர் போல அவர் நடந்திருப்பதாகவும் நக்கலடித்துள்ளார் ராகுல்.
இதுகுறித்து உ.பி. மாநிலம் புலந்த்சாகரில் விவசாயிகளின் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது ராகுல் காந்தி கூறுகையில், மோடி பிரதமராக பதவியேற்ற இந்த இரண்டரை கால ஆட்சிக்காலத்தில் இப்போதுதான் அவர் ஒரு பிரதமர் போல நடந்து கொண்டுள்ளார். பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவராக முதல் முறையாக நடந்துள்ளார்.

ராணுவத்தினரின் செயலுக்காக நான் பிரதமரைப் பாராட்டுகிறேன். பிரதமருக்கு எனது முழு ஆதரவும் உண்டு. ஒட்டுமொத்த நாடும், காங்கிரஸ் கட்சியும் பிரதமருக்கு துணை நிற்கும் என்றார் ராகுல்காந்தி.
ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராணுவத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தும், பிரதமருக்கு பாராட்டு தெரிவித்தும் கருத்து வெளியிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications