மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 154 இடங்கள்- தி வீக் கருத்துக் கணிப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 154 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தி வீக் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் வரும் 15ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலையொட்டி "தி வீக்' பத்திரிகையும், ஹன்ஸா ஆய்வு அமைப்பும் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தின.

இக்கருத்து கணிப்பு முடிவுகள்:
- பாஜக கூட்டணி 154 தொகுதிகளைக் கைப்பற்றும்
- சிவசேனாவுக்கு 47 இடங்கள் கிடைக்கும்.
- காங்கிரஸ் கட்சி 25 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 17 இடங்களையும் கைப்பற்றும்
- மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவுக்கு 10 இடங்கள் கிடைக்கும்.
- சுயேட்சைகள் 20 தொகுதிகளைக் கைப்பற்றுவர்
- அதாவது பாஜகவுக்கு 36.50%, சிவசேனாவுக்கு 17.10%, தேசியவாத காங்கிரஸுக்கு 5.85%, காங்கிரஸுக்கு 11.97% வாக்குகள் கிடைக்கும்
- முதல்வர் பதவிக்கான கருத்துக் கணிப்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது.
- 2வது இடத்தில் காங்கிரஸின் பிருத்விராஜ் சவானும் 3-வது இடத்தில் மகாராஷ்டிர நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் 4-வது இடத்தில் பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ், 5-வது இடத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் உள்ளனர்.












Click it and Unblock the Notifications