பாஜகவில் இணைந்தார் ‘பி.எஸ்.ஆர்’ ஸ்ரீராமுலு: சுஷ்மா சுவராஜ் கடும் எதிர்ப்பு

கர்நாடக மாநில பி.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவரான ஸ்ரீராமுலு தான் மீண்டும் பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று பெல்லாரியில் நடைபெற்ற நடைபெற்ற பி.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீராமுலு, அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :-
பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியைப் பிரதமராக்கவே பாஜகவில் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளேன். என்னுடன் 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொண்டர்களும் பாஜகவில் இணைகின்றனர்' எனத் தெரிவித்தார்.
ஸ்ரீராமுலு பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து அவருக்கு வரும் லோக்சபா தேர்தலில் பெல்லாரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே ஸ்ரீராமுலு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவு செய்துள்ளார் பாஜக மூத்தத் தலைவர் சுஷ்மா சுவராஜ். அதில் அவர், ‘கர்நாடகாவில் பி.எஸ்.ஆர் கட்சி பாஜகவுடன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இத்தனைக்கும் ஒரு காலத்தில் ஸ்ரீராமுலு மற்றும் இரும்பு தாது பிராடுகளான ரெட்டி சகோதரர்களுக்கு அரசியல் ஆசானாக இருந்தவரே சுஷ்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications