சபாஷ்.. 4 வருட சிறைத் தண்டனையின்போது 20 கிலோ எடையை குறைக்க சுதாகரன் முடிவு!
சிறையில் இருக்கும் 4 ஆண்டுகளில் 20 கிலோ எடையை குறைக்க சுதாகரன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பெங்களூரு: சிறையில் இருக்கப்போகும் 4 ஆண்டுகளில் 20 கிலோ எடையை குறைக்க சுதாகரன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் கொடுக்கப்படும் களியையும் சப்பாத்தியையும் அவர் விரும்பி சாப்பபிடுவதகா கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளனர். சசிகலாவும் இளவரசியும் ஒன்றாக சரணடைந்த நிலையில் சுதாகரண் மட்டும் தனியாக வந்து சரணடைந்தார்.
ஆரம்பத்திலிருந்தே சசிகலா தரப்பு சுதாகரனை சட்டை செய்யாமல் உள்ளது. சசிகலா மற்றும் இளவரவசியை காண சிறைக்கு செல்லும் அவரது குடும்பத்தினரும் சுதாகரணை கண்டுகொள்வதில்லை.
சிறையில் கொடுக்கும் உணவே போதும்
அதைப்பற்றி சுதாகரனும் கவலைப்படவில்லையாம். இந்நிலையில் சிறையில் என்ன உணவு கொடுக்கிறீர்களோ அதையே சாப்பிடுகிறேன் என சுதாகரன் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட சிறப்பு சலுகைகள் எதுவும் வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
4 வருடங்களில் 20 கிலோ எடையை குறைக்கனுமாம்
வருடத்துக்கு 5 கிலோ வீதம் என சிறையில் இருக்கப்போகும் இந்த 4 ஆண்டுகளில் 20 கிலோ எடையை குறைக்க சுதாகரன் திட்டமிட்டுள்ளாரம். சிறையில் கொடுக்கும் களியையும் சப்பாத்தியையும் விரும்பிச் சாப்பிடுகிறார்.
பாக்கெட் பாக்கெட்டாக திருநீர்
அதேநேரத்தில் பாக்கெட் பாக்கெட்டாக திருநீர் மட்டும் சிறைக்காவலர்களிடம் கேட்கும் சுதாகரன், நள்ளிரவு ஒருமணி வரை காளிக்கு சிறப்பு பூஜை செய்து வருகிறாம். அவர் உச்சரிக்கும் மந்திரங்கள் மற்றும் உடல் முழுவதும் திருநீரை பூசிக்கொண்டு மந்திரவாதியை போல் தோற்றமளிப்பதால் சக கைதிகள் அச்சமடைந்துள்ளனர்.
சாமி கும்பிடுவார், பயப்படாதீங்க
இதையடுத்து சக கைதிகளை சமாதானம் செய்த சிறைக் காவலர்கள், சுதாகரன் நல்லவர். தீவிரமாக சாமி கும்பிடுவார் அவ்வளவுதான். பயப்பட வேண்டாம் என கூறியுள்ளனர்.