தாய் நாட்டை நேசிக்காத அமீர்கானுக்கு ஆசிரியர் அவசியம்.. பாரிக்கருக்கு ஆதரவாக குதித்த சு.சுவாமி
டெல்லி: சகிப்பின்மை அதிகரித்து வருவதாக நடிகர் அமீர்கான் கூறியதை விமர்சித்த பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு ஆதரவாக பாஜக எம்.பி. சுப்பிரமணிய சாமி களமிறங்கியுள்ளார்.
ஒன்றும் அறியாத அமீர்கானுக்கு கற்றுக்கொடுக்க ஆசிரியர் தேவை என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கான் டெல்லியில் கடந்த நவம்பரில் நடந்த ஒரு விழாவில் பேசும்போது, நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக குறிப்பிட்டார்.

அமீர்கான் கருத்து
நாம், குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறி விடலாமா? என்று முதல் முறையாக என் மனைவி கிரண் என்னிடம் கேட்டார் என்று அமீர்கான் கூறியிருந்தார்.

பாரிக்கர் தாக்கு
இந்நிலையில் புனேயில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய மனோகர் பாரிக்கர், அமீர்கானின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

எனது வீடுதான் பெரிது
நடிகர் ஒருவர் பேசியபோது, தனது மனைவி இந்த நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக கூறியதாக குறிப்பிட்டார். இது ஆணவம் நிறைந்த கருத்தாகும். ஒருவேளை நான் ஏழையாகவும், சிறிய வீட்டில் வசிப்பவராக இருந்தாலும் கூட எனது வீட்டைத்தான் விரும்புவேன்.

துணிச்சல் வந்துள்ளது
நாட்டுக்கு எதிராக பேசுவதற்கு அவர்களுக்கு எப்படி துணிச்சல் அல்லது தைரியம் வந்தது? அத்தகைய நபர்களுக்கு நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று மனோகர் பாரிக்கர் பேசினார். இவரது கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
|
ஆசிரியர் தேவை
சுப்பிரமணிய சாமி இதுகுறித்து கூறுகையில், அமீர்கான் விவகாரத்தில் மனோகர் பாரிக்கரின் கருத்து தொடர்பாக இவ்வளவு கோஷம் எழுப்படுவது ஏன்? தாய் நாட்டை நேசிப்பதற்கு எந்த ஒரு காரணமும் தேவையில்லை, இதுகுறித்து அமீர்கானுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றால் அவருக்கு அதனை கற்றுக்கொடுக்க ஆசிரியர் தேவை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications