கருப்பு பண பட்டியலிலுள்ள இந்தியர்கள் யார்? என்ன செய்தார்கள்?
டெல்லி: உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் சாம்பாதித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைப்பது வழக்கம். ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளின் எதிர்ப்பை அடுத்து, தங்கள் நாட்டில் சட்ட விரோதமாக கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுமார் 40 பேரின் பெயர் மற்றும் பிறந்த தேதியை வெளியிட்டுள்ளது சுவிஸ் மத்திய வரி நிர்வாக அமைப்பு.

இதில் இந்தியாவை சேர்ந்த பிர்லா குடும்பதை சேர்ந்த யாஷ் பிர்லாவின் பெயர் இடம் பெற்றுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் அப்பட்டியலில் டெல்லியை சேர்ந்த குருஜித் சிங், ரித்திகா சர்மா, சையது முகமது மசூத் மற்றும் அவரது மனைவி சந்த் கவுசர் ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
நேற்றுமுன்தினம் சுவிஸ் வெளியிட்டிருந்த பட்டியலில் டெல்லியை சேர்ந்த பெண்களான லதா சாஹ்னி மற்றும் சங்கீதா சாஹ்னி ஆகியோர் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இதில் லதா சாஹ்னி மற்றும் சங்கீதா ஆகியோர் மாமியார் மருமகள் என்பதை பற்றி ஏற்கனவே பார்த்தோம். மற்றவர்களின் பின்புலம் இதோ:
குருஜித் சிங்: வேவ்குரூப் கம்பெனிகளின் இயக்குநர்தான் இந்த குருஜித் சிங். இந்த நிறுவனங்களின் உரிமையாளர் மதுபான தொழில் மன்னன் போன்டி சத்தா சமீபத்தில் கொல்லப்பட்டார். குருஜித் பெயர் 2012லேயே கருப்பு பண விவகாரத்தில் அடிபட்டது. வருமான வரித்துரை அப்போது நடத்திய ஆய்வில், குருஜித் சிங் வீட்டில் இருந்து ரூ.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
சையது முகமது மசூத் மற்றும் சந்த் மசூத்: மும்பையை சேர்ந்த சிட்டி லிமொசின் நிறுவனத்தின் தலைவர் இந்த சையது முகமது மசூத். சுமார் 1.25 மில்லியன் டாலர் மதிப்புக்கு சுவிஸ் வங்கியில் இவருக்கு கணக்கு இருந்துள்ளது. அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது, முறைகேடு தொடர்பாக சிட்டி குரூப் மற்றும் மசூதின் மனைவி சந்த் மசூத் பெயரையும் வழக்கில் இணைத்திருந்தது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications