இந்திய கருப்பு பண முதலைகள் இனி சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்ய முடியாது.. போட்டாச்சு புது ஒப்பந்தம்
டெல்லி: இந்திய கருப்பு பண முதலைகளுக்கு இனிமேல் சுவிஸ் வங்கி சொர்க்கபுரியாக இருக்காது. அதற்கு ஏற்ற ஒப்பந்தத்தை இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள பெரும்பாலான கருப்பு பண முதலைகளை சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து குவித்து வைத்துள்ளனர். அந்த நாட்டு விதிமுறைப்படி, அவர்களின் தகவல்கள் வெளியே தரப்படமாட்டாது என்பது இதற்கு காரணம்.

இந்த பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வந்தது. அதன் ஒருபகுதியாக இந்தியா-சுவிட்சர்லாந்து நடுவே 'Joint Declaration' for implementation of Automatic Exchange of Information (AEOI) என்ற பெயரில் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தப்படி, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சுவிஸ் வங்கியிலுள்ள இந்தியர்களின் அக்கவுண்ட் விவரங்களை இந்தியா ஆட்டோமெட்டிக்காக தெரிந்து கொள்ள முடியும். முதல் தகவல் 2019ம் ஆண்டு செப்டம்பரில் வெளியாகும்.
இந்த உடன்படிக்கை, கருப்பு பண ஒழிப்பிற்கு ஒரு முக்கிய பங்களிப்பு என நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. அதேநேரம், 2018 செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக சுவிஸ் வங்கிகளிலிருந்து பணத்தை ஷிப்ட் செய்யும் முதலைகள் குறித்த விவரம் இந்தியாவுக்கு கிடைக்காது என்றே தெரிகிறது. அதுகுறித்த ஷரத்து தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
ஆனால், சுவிஸ் வங்கிகளில் இனிமேலும் கருப்பு பண முதலைகள் பணத்தை டெபாசிட் செய்ய முடியாமல் போகச் செய்ய இந்த ஒப்பந்தம் உதவும். கருப்பு பண முதலைகள் வேறு நாடுகளின் வங்கிகளை தேடி அலைய வேண்டிவரலாம். பல நாடுகளும், இந்தியாவுடன் தங்களது வங்கி கணக்கு தகவல்களை பரிமாற தயாராக இருப்பதால், கருப்பு பணத்தை எங்கு பதுக்குவது என்ற சிக்கல் பெரு முதலைகளுக்கு எழலாம் என எதிர்பார்க்கிறது மத்திய அரசு.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications