முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு: கேரளம் அடாவடி
கேரளா: முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய சென்ற தமிழக அதிகாரிகளுக்கு கேரள வனத்துறை அதிகாரிகள் நேற்று தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளையும் அனுமதிக்க மறுத்த கேரள வனத்துறையினர், அணைக்கு செல்வதற்கான காரணம் குறித்த விளக்க கடிதம் கொடுத்த பிறகே அனுமதிக்க முடியும் என்று கூறியதால் அவர்கள் திரும்பி வந்தனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடியாக உயர்த்தப்பட்டது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தினசரி சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

நேற்று காலை 10 மணியளவில் தமிழக பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் சவுந்தரம் மற்றும் 5 ஊழியர்கள் முல்லைப்பெரியாறு அணைக்கு வழக்கம் போல் ஆய்வுக்கு சென்றனர். அப்போது தேக்கடியில் உள்ள கேரள வனத்துறை அதிகாரிகள் அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு செல்லுமாறு கூறியுள்ளனர். மேலும் ‘அணைக்கு செல்வதற்கான காரணம் குறித்து விளக்க கடிதம் தர வேண்டும். அவ்வாறு தந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும்' என அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோன்று தினசரி ஆய்வு பணிக்கு சென்ற தமிழக அதிகாரிகளை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்திய போது, கேரள வனத்துறை உயர் அதிகாரிகளிடம் தமிழக அதிகாரிகள் முறையிட்டனர்.
அப்போது அன்றாட பணிக்கு செல்லும் அதிகாரிகளிடம் விளக்க கடிதம் கேட்க தேவை இல்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்த நிகழ்வை தமிழக அதிகாரிகள் நேற்று சுட்டிக்காட்டினர். ஆனால் விளக்க கடிதம் கொடுத்தால் மட்டுமே அணைக்கு செல்ல அனுமதிக்க முடியும் என்று கேரள வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், கேரள வனத்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழக அதிகாரிகள் அணைக்கு செல்லாமல் திரும்பி வந்து விட்டனர். அணைப்பகுதிக்கு பாதுகாப்பு சென்ற தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கும் கேரளா வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘முல்லைப்பெரியாறு அணைக்கு வெளியில் இருந்து யாரேனும் ஆய்வுக்கு வந்தால் அவர்களிடம் விளக்க கடிதம் கேட்டால் அது நியாயம். அன்றாட ஆய்வுப்பணிக்கு செல்லும் தமிழக அதிகாரிகளுக்கு விளக்க கடிதம் கேட்பது எந்த வகையில் நியாயம்.
தினமும் ஒரே விதமான பணிக்கு தான் செல்கிறோம். ஒவ்வொரு நாளும், ஒரே மாதிரியான விளக்க கடிதம் கொடுத்து கொண்டே இருக்க முடியுமா? இந்த பிரச்சினை குறித்து சென்னையில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்படும்' என்று தெரிவித்தனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications