'முழுச்சுக்கோ': பேசும் 'மான்ஸ்டர்' மீனின் மினி அட்வைஸ்- உங்களுக்கும் தான்!
பெங்களூர்: அலுவலகத்தில் தூங்கி வழியும் ஊழியர் ஒருவரிடம் அவர் சாப்பிட வைத்திருந்த மீன் விழித்துக் கொள் என்று கூறும் வீடியோ மிகவும் பிரபலமாகியுள்ளது.
இணைதளத்தில் மீன் ஒன்று அறிவுரை கூறும் வீடியோ மிகவும் பிரபலமாகி உள்ளது. அந்த வீடியோவில், அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் தூங்கி வழிகிறார். அவர் மதிய உணவுக்காக தட்டில் மீன் வைத்திருக்கிறார். திடீர் என்று யாரோ உஷ், உஷ் என்று சொல்லும் சத்தம் கேட்டு அந்த நபர் திரும்பிப் பார்த்தால் தட்டில் இருக்கும் மீன் பேசுகிறது. இங்கு உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறாய். நீ தான் என்னை விட செத்தவன் போல் உள்ளாய்.
உடனடியாக இங்கிருந்து கிளம்பிச் சென்று வேலை நல்ல வேலையில் சேர் என்று அது அந்த நபருக்கு அறிவுரை வழங்குகிறது. அறிவுரையை கேட்ட அந்த நபர் தனக்கு பயனளிக்காத வேலையில் காலத்தை வீணடித்ததை உணர்கிறார். மீனின் அறிவுரை அவருக்கு மட்டுமின்றி அனைவருக்குமாம். இந்த வீடியோவை பார்த்த சில அந்த மீனை சல்மான் ருஷ்டி என்றும், சிலர் டூனா படேகர் என்றும் அழைக்கின்றனர்.
அந்த மீனின் மினி அறிவுரையை கேட்க இங்கே கிளிக் செய்யவும்.