கர்நாடகத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பதற்றம் நீடிப்பு... பாதுகாப்பு அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: காவிரி பிரச்சனைத் தொடர்பாக கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வெடித்துள்ள கலவரத்தில் தமிழர்கள் வீடுகள், கடைகள் உள்ளிட்ட சொத்துக்கள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் உள்ள இந்திராநகர் மற்றும் விஜய்நகர் உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இன்னும் பதற்றம் நீடித்து வருகிறது.

காவிரியில் இருந்து செப்டம்பர் 20ம் தேதி வரை நாளொன்றுக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று கர்நாடகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பெங்களூருவில் தமிழர்கள் சொத்துக்கள், வாகனங்கள் குறித்து வைத்து தாக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து பாதுகாப்பு கருதி தமிழர்கள் கடைகளை மூடுமாறு அம்மாநில போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tamil dominated areas remain tense in Bengaluru

இந்நிலையில், பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வாழும் இந்திரா நகர், விஜய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் உல்சூர் டன்னரி சாலை உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அங்கு பதற்றம் நிலவி வருவதால், கேஎஸ்ஆர்டிசி, ஆர்டிசி பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெங்களூர் பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. பஸ் நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.

மெஜஸ்டிக், சிவாஜிநகர் பேருந்து நிலையங்களில் முற்றிலும் பேருந்துகள் ஓடவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+