For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி படுகொலை ஏன்? மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது தமிழக அரசு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மத்திய அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மத்திய அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Tamilnadu govt files report to central govt on the Tuticorin fire incident

2 நாட்கள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடியில் நாளை காலை 8 மணி முதல் வரும் 27ஆம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டது ஏன்? என தமிழக அரசிடம் உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக தலைமை செயலாளர் அறிக்கை அனுப்பியதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதால் அறிக்கை விபரங்களை வெளியிட முடியாது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

English summary
Tamilnadu govt files report to central govt on the Tuticorin fire incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X