காவிரி: டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சகம் முன்பு போராட்டம் நடத்திய தமிழக மாணவர்கள் கைது!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி டெல்லி நீர்வளத்துறை அமைச்சகம் முன்பு போராட்டம் நடத்திய தமிழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சகம் முன்பு தமிழகக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அம்மாணவர்களை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. ஆறாவது நாளாக இன்றும் மாநிலத்தின் பல இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள், ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் முன்பு தமிழகக் கல்லூரி மாணவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு போராடிய மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications