ரெடியா இருங்க.. தமிழகம், கர்நாடகா உட்பட 4 மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை மையம்
Recommended Video
டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திராவில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மன்னார் வளைகுடாவில், தமிழகத்தையொட்டிய பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழகம், தெற்கு ஆந்திர கரையோரம் கடல் அலைகள் சீற்றத்துடன் எழுந்து வரும். எனவே, மீனவர்கள் மீன்பிடிக்க, கடலுக்கு செல்ல வேண்டாம் எனக்கூறப்பட்டுள்ளது.
மத்தியமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் நேற்றுமுன்தினம் முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications