20 தமிழக தொழிலாளிகள் படுகொலையை கண்டித்து பெங்களூரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
பெங்களூர்: ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் மலைப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாகக் கூறி அம்மாநில போலீசாரும், வனத் துறையினரும் சேர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் பலியாகினர். செம்மரக் கடத்தல்காரர்களை விட்டுவிட்டு பிழைப்புக்காக மரம் வெட்டியவர்களை ஆந்திரா போலீசார் சுட்டுக் கொன்றதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆந்திர போலீசாரோ தாங்கள் சோதனை நடத்த சென்றபோது மரம் வெட்டியவர்கள் தங்களை தாக்க வந்ததாகவும் அதனால் தற்காப்புக்காக அவர்களை சுட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆந்திர போலீசார் பொய் சொல்கின்றனர் என்றும், அவர்கள் திட்டமிட்டே இந்த படுகொலையை செய்ததாகவும் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.
தமிழர்கள் படுகொலை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications