20 தமிழக தொழிலாளிகள் படுகொலையை கண்டித்து பெங்களூரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
பெங்களூர்: ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் மலைப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாகக் கூறி அம்மாநில போலீசாரும், வனத் துறையினரும் சேர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் பலியாகினர். செம்மரக் கடத்தல்காரர்களை விட்டுவிட்டு பிழைப்புக்காக மரம் வெட்டியவர்களை ஆந்திரா போலீசார் சுட்டுக் கொன்றதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆந்திர போலீசாரோ தாங்கள் சோதனை நடத்த சென்றபோது மரம் வெட்டியவர்கள் தங்களை தாக்க வந்ததாகவும் அதனால் தற்காப்புக்காக அவர்களை சுட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆந்திர போலீசார் பொய் சொல்கின்றனர் என்றும், அவர்கள் திட்டமிட்டே இந்த படுகொலையை செய்ததாகவும் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.
தமிழர்கள் படுகொலை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications