20 தமிழக தொழிலாளிகள் படுகொலையை கண்டித்து பெங்களூரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் மலைப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாகக் கூறி அம்மாநில போலீசாரும், வனத் துறையினரும் சேர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் பலியாகினர். செம்மரக் கடத்தல்காரர்களை விட்டுவிட்டு பிழைப்புக்காக மரம் வெட்டியவர்களை ஆந்திரா போலீசார் சுட்டுக் கொன்றதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Tamils in Banglore protest condemning Andhra encounter

ஆந்திர போலீசாரோ தாங்கள் சோதனை நடத்த சென்றபோது மரம் வெட்டியவர்கள் தங்களை தாக்க வந்ததாகவும் அதனால் தற்காப்புக்காக அவர்களை சுட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆந்திர போலீசார் பொய் சொல்கின்றனர் என்றும், அவர்கள் திட்டமிட்டே இந்த படுகொலையை செய்ததாகவும் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழர்கள் படுகொலை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+