For Daily Alerts
Just In
தேஜ்பால் மீது புகார் கொடுத்த பெண் பத்திரிகையாளர் ராஜினாமா
மும்பை: தருண் தேஜ்பால் மீது பாலியல் புகார் கொடுத்த பெண் பத்திரிகையாளர் டெஹல்கா வார இதழில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
டெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பா தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று சக பெண் பத்திரிகையாளர் புகார் கொடுத்தார். நாடு முழுவதும் இப்புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போலீசார் பலாத்கார முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தருண் தேஜ்பால் இன்று தமக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதனிடையே தருண் தேஜ்பால் மீது புகார் கொடுத்த பெண் பத்திரிகையாளர் டெஹல்கா நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
English summary
The woman journalist who had accused Tehelka Founder Editor Tarun Tejpal of sexually assaulting her resigned from the magazine on Monday saying it was impossible to work there.
Story first published: Monday, November 25, 2013, 16:35 [IST]