கொலை மிரட்டலால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற தஸ்லிமா நஸ்ரின்
டெல்லி: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் இந்தியாவில் இருந்து வெளியேறி அமெரிக்கா சென்றுள்ளார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவில் வசித்து வந்தார். இந்நிலையில் வங்கதேசத்தில் மதச்சார்பற்ற பிளாக்கர்களான அவிஜித் ராய், வாசிகிர் ரஹ்மான் மற்றும் அனந்த பிஜோய் தாஸ் ஆகியோர் இஸ்லாத்தை தீவிரவமாக பின்பற்றுபவர்களால் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அடுத்ததாக தஸ்லிமா நஸ்ரினை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியானது.

இதையடுத்து தஸ்லிமா அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அவரை நியூயார்க்கைச் சேர்ந்த தி சென்டர் ஃபார் என்கொயரி என்ற அமைப்பு அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. அவர் அமெரிக்காவில் பாதுகாப்பாக தங்கவும் அந்த அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. தஸ்லிமா அமெரிக்காவில் தங்கியிருக்கும் வரை அவரது செலவை கவனிக்க அந்த அமைப்பு நிதி திரட்டியுள்ளது.
இது குறித்து சென்டர் ஃபார் என்கொயரியின் சிஇஓ ரொனாலாட் ஏ. லின்ட்சே கூறுகையில்,
தஸ்லிமா ஒரு சர்வதேச ரோல் மாடல். அவரின் படைப்புகளும், துணிச்சலும் பலருக்கு முன்மாதிரியாக உள்ளது. தஸ்லிமாவின் உயிருக்கு ஆபத்து இருக்கையில் எங்களால் அதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றார்.
இந்நிலையில் அச்சுறுத்தல் நீங்கும் வரை அமெரிக்காவில் இருந்துவிட்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்துவிடுவேன் என தஸ்லிமா தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications