கொலை மிரட்டலால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற தஸ்லிமா நஸ்ரின்
டெல்லி: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் இந்தியாவில் இருந்து வெளியேறி அமெரிக்கா சென்றுள்ளார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவில் வசித்து வந்தார். இந்நிலையில் வங்கதேசத்தில் மதச்சார்பற்ற பிளாக்கர்களான அவிஜித் ராய், வாசிகிர் ரஹ்மான் மற்றும் அனந்த பிஜோய் தாஸ் ஆகியோர் இஸ்லாத்தை தீவிரவமாக பின்பற்றுபவர்களால் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அடுத்ததாக தஸ்லிமா நஸ்ரினை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியானது.

இதையடுத்து தஸ்லிமா அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அவரை நியூயார்க்கைச் சேர்ந்த தி சென்டர் ஃபார் என்கொயரி என்ற அமைப்பு அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. அவர் அமெரிக்காவில் பாதுகாப்பாக தங்கவும் அந்த அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. தஸ்லிமா அமெரிக்காவில் தங்கியிருக்கும் வரை அவரது செலவை கவனிக்க அந்த அமைப்பு நிதி திரட்டியுள்ளது.
இது குறித்து சென்டர் ஃபார் என்கொயரியின் சிஇஓ ரொனாலாட் ஏ. லின்ட்சே கூறுகையில்,
தஸ்லிமா ஒரு சர்வதேச ரோல் மாடல். அவரின் படைப்புகளும், துணிச்சலும் பலருக்கு முன்மாதிரியாக உள்ளது. தஸ்லிமாவின் உயிருக்கு ஆபத்து இருக்கையில் எங்களால் அதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றார்.
இந்நிலையில் அச்சுறுத்தல் நீங்கும் வரை அமெரிக்காவில் இருந்துவிட்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்துவிடுவேன் என தஸ்லிமா தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications