டிசிஎஸ் பணி சேர்க்கை டிஜிட்டல் மயமானது!
இதன் மூலம் தரமான, திறமையான பணியாளர்களைத் தேர்வு செய்வதை அது உறுதி செய்துள்ளது.
இதற்காக 450 கல்வி நிறுவனங்களுடன் டிசிஎஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர், டிசிஎஸ்ஸின் ஆன்லைன் வேலைவாய்ப்பு தளமான நெக்ஸ்ட்ஸ்டெப் தளத்தின் மூலமாகவே வேலைக்கு விண்ணப்பிப்பது, வேலைநியமன கடிதத்தைப் பெறுவது உள்ளிட்ட அனைத்தையும் மேற்கொள்ளும்.
கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகும் மாணவ, மாணவியர் இந்த இணையதளத்திற்குப் பரிந்துரைக்கப்படுவர். மாணவ, மாணவியர் தங்களது பெயர் விவரங்களை நெக்ஸ்ட்ஸ்டெப் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அங்கு மீண்டும் கல்வித்தகுதி உள்ளிட்டவை பரிசீலிக்கப்படும். பின்னர் அவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்.
இதற்காகவே டச்ஸ்டோன் என்ற பெயரிலான சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு, பேச்சுத்திறமை உள்ளிட்டவை பரிசீலிக்கப்படும்.
அடுத்து இன்டர்வியூ. அது மட்டுமே நேரடியாக நடைபெறும். மற்ற அனைத்துமே ஆன்லைன்தான். ஆனால் நேர்முகத்தேர்வையும் கூட கம்ப்யூட்டர் மூலமாகவே நடத்துவார்களாம்.
எல்லாம் நல்லபடியாக முடிந்தால் நெக்ஸ்ட்ஸ்டெப்பே உங்களுக்கு வேலை நியமன கடிதத்தையும் அனுப்பி வைக்கும். அதை தங்களது மொபைல் போன் ஆப் மூலமாக டவுன்லோட் செய்து கொ்ண்டு வேலைக்குப் போய்ச் சேர வேண்டியதுதான். மொபைல் ஆப் மூலமாகவே ஜாயினிங் லெட்டரையும் அனுப்பி வைக்கலாம்.
மொத்தத்தில் ஆளெடுப்பை முழுமையான டிஜிட்டல்மயமாக்கி விட்டது டிசிஎஸ்.
இதுபோல கம்யூன் என்ற தளத்தையும் வைத்துள்ளது டிசிஎஸ். இதில் கிட்டத்தட்ட 3 லட்சம் மாணவ, மாணவியர் தங்களைப் பதிவு செய்துள்ளனர். இது ஒரு விவாத மேடை போல. இது மாணவ, மாணவியர் படிக்கும்போதே தங்களது திறனை வளர்த்துக் கொள்ள உதவும் பிளாட்பார்ம்போல அமைந்துள்ளது.