அடுத்த வாரிசு... தெலுங்குதேசம் பொதுச்செயலரானார் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ்!!
விஜயவாடா: தெலுங்குதேசம் கட்சியின் பொதுச்செயலராக அக்கட்சியின் தேசியத் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்குதேசம் கட்சியின் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கான நிர்வாகிகளை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திரா மாநில தெலுங்குதேசம் கட்சியின் தலைவராக முன்னாள் உள்துறை அமைச்சர் கிமிடிகல வெங்கட ராவ், தெலுங்கானா தலைவராக எல். ரமணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மேல்சபை தேர்தலில் எம்.எல்.ஏக்களை பணம் கொடுத்து பேரம் பேசிய வழக்கில் கைதான ரேவந்த் ரெட்டிக்கு அம்மாநில செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் தேசிய கமிட்டியின் பொதுச்செயலராக சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் (வயது 32) நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்குதேசம் கட்சியில் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் இதுவரை தொண்டர் நல நிதி ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை வகித்து வந்தார்.
அத்துடன் 17 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் பொலிட்பீரோவில் மைத்துனர் ஹரிகிருஷ்ணாவையும் சந்திரபாபு நாயுடு நியமித்துள்ளார். இந்த பொலிட்பீரோவில் அசோக் கஜபதி ராஜூ, ராமகிருஷ்ணுடு, கிருஷ்ணமூர்த்தி, உமா மாதவ ரெட்டி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தெலுங்குதேசம் கட்சியின் 33 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக மத்திய கமிட்டி எனப்படும் பொலிட்பீரோ தற்போது உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications