9ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த கணக்கு வாத்தியார்: அடித்து நொறுக்கிய மக்கள்
விசாகபட்டினம்: ஆந்திராவில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த கணக்கு வாத்தியாரை பொதுமக்கள் பிடித்து அடித்து நொறுக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கஞ்சரபாலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் கணக்கு வாத்தியாராக பணிபுரிபவர் ஏ. பாஸ்கர் ராவ்(33). அவர் தனது பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கடந்த சில வாரங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து மாணவி பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்தும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் பாஸ்கர் ராவின் சில்மிஷங்கள் பற்றி தெரிவித்துள்ளார். உடனே மாணவியின் பெற்றோரோடு சேர்ந்து உள்ளூர் மக்கள் வந்து பாஸ்கர் ராவை பிடித்து அடித்து நொறுக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
மாணவியின் தாய் பாஸ்கர் மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பாஸ்கரை கைது செய்தனர். பொதுமக்கள் அடித்ததில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications