காலையில் மாணவர்களுக்கு பாடம்... மாலையில் திருமணம்- கடமை தவறாத ஒரு அசத்தல் மணமகள்!
பாட்னா: பீகாரில் ஆசிரியராக இருக்கும் பெண் ஒருவர் கடமை உணர்வுடன் காலையில் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்துவிட்டு மாலை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், சரன் மாவட்டம் லக்லாத்புர் தொகுதியில் உள்ள லஷ்கரிபுர் கிராமத்தில் உள்ளது அரசு ஆரம்ப உருது பள்ளி. தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இது.

இந்தப் பள்ளியில் டாடாகிர் பாத்திமா என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பாட்னாவை சேர்ந்த சையது ஜாபர் என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை மாலை திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் அன்று மாலையில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் காலையில் பள்ளியில் இருந்து பாத்திமாவுக்கு அழைப்பு வந்தது. திருமணம் என்றும் பாராமல் கடமை தான் முக்கியம் என்று அவர் பள்ளிக்கு கிளம்பி விட்டார். பின்னர் பள்ளி முடிந்து மாலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதேபோல் மறுநாள் ஞாயிறன்று பாத்திமாவிற்கு வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றும் காலையில் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார். திருமணத்திற்காக அதிக நாள் விடுமுறை எடுக்க தனக்கு விருப்பம் இல்லை என்றும் மாணவர்களுக்கு பாடம் நடத்தவே முக்கியத்துவம் அளிப்பேன் என்றும் பாத்திமா கூறினார். இச்சம்பவத்தால் பாத்திமாவிற்கு பராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications